×

வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்

கராச்சி: வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி பூஸ்ரா பீபிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்த இம்ரான் கானின் மனைவி, வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு கெட்டு போன உணவு வழங்கப்படுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக என்னை சிறைக்கு கொண்டு செல்லும்படியும் பீபி கேட்டு கொண்டார். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள ஒரு நீதிமன்றம், அவரது கோரிக்கையை ஏற்று சிறைக்கு செல்ல ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனால், வீட்டு காவலில் வைக்கும்படி அரசு உத்தரவிட்டதற்கு பதிலாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்படி, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

The post வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Karachi ,Pakistan ,
× RELATED இம்ரான் கான் மீது புதிய வழக்கு